ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடலை பருவம்

மனமே
வருங்கால மனமே
அனுபவத்தில் சொல்கிறேன் கேட்டுகொள் ...
எதை வேண்டுமானாலும் இழந்தால் திரும்ப பெறலாம்
ஒன்றை தவிர
விடலை பருவ சந்தோசத்தை தவிர ...
ஆதலால்
ஒருபோதும் இழந்துவிடாதே
யாருக்காகவும் ....எதற்க்காகவும்........
காலங்கள் ஓடினாலும்
அந்த நட்பின் இனிமை மட்டும்
இன்னும் என் நெஞ்சுக்குள்ளே இருந்து
என்னை கொல்லாமல் கொல்லுகிறது
இறந்து போன இனிய நினைவுகளை வைத்து .....
இப்படிக்கு
விடலை பருவ சந்தோஷத்தை
முழுமையாய் அனுபவித்து
இன்னும் அதன் பிடியில் இருந்து
மீள முடியாது
தவிக்கும் பிஞ்சு நெஞ்சம்....

வியாழன், 15 ஜூலை, 2010

ஆசான்

வாழ்கையில் பல நபர்கள் வந்தார்கள்
ஆசிரியர்கள் என்ற பெயரில்
எனக்கு நல்லுரைகளை போதிக்க .....
ஆனால் ஏற்று கொள்ள முடியாது தவித்தது என் மனம்
காரணம் அவர்கள் கடைபிடிக்க முடியா ஒன்றை
என் மேல் திணித்ததால்....
அதனாலோ என்னவோ
அவர்களை வெறுத்த என் மனம்
உன்னை மட்டும் ஏற்று கொண்டது
என் ஆசானாய்.....
நண்பன் என்ற போர்வையில்
நீ வந்ததனால் ......