அனைத்திலும் நீயே ..
நெடுநாள் கழித்து எட்டிப் பார்த்தேன்
வலைப்பதிவை ..
திறந்த வுடன் கை சென்றது
உன்னைப் பற்றி எழுதவே..
ஆம் ..
மனதினில் தோன்றும் கனவுகளும் உன் நினைவுகளே ..
என் விரல்களில் தவழும் எழுத்துக்களும் உன் அசைவுகளே ..
மகிழ்ச்சியை என்னுள் இருமடங்காக்கினாய்
என்னால் செய்யமுடியாததையும் செய்து
எனக்கும் ..
என் மனம் விரும்பியவர்களுக்கும் ....
அனைத்திலும் என்னோடு நீ ..
நீக்கமுடியா கனவும் நீ..
வந்தாய் வாழ்கை துணையாய் !!
கலந்தாய் வாழ்வின் முழுமையாய் !!!