செவ்வாய், 7 மார்ச், 2017

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து - அன்பின் வெளிப்பாடு

இது வெறும் பொங்கல் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வாழ்த்துஅட்டை அல்ல

உறவுகளின் உள்ள உணர்வின் வெளிப்பாடு ..

என்றுமே நினைக்காத தபால் காரரும், தபால் அலுவலகமும்

மார்கழி மாத இறுதி நாட்களில் மட்டும் கடவுளாகவும், கோவிலாகவும்

புலப்படுகின்றன கண்களுக்கு காரணம்

வருடத்திற்கு ஒரு முறை ஈடுஇணையற்ற

தம் உறவினர்களிடம் இருந்து வரும்

அன்பு பரிசை காலம் தவறாது வந்து அளிப்பதால்...

ஆனால் இன்றோ நிலைமையே வேறு

அதை எண்ணி பார்க்கும் நேரம் கூடநமக்கு இல்லை ..

அத்தகைய சின்னஞ்சிறு மகிழ்ச்சியை அழித்த பெருமை

மின்னஞ்சல்களையும், குறுந்தகவல்களையுமே சாரும்...

ஆயிரம் குறுந்தகவல் அனுப்பினாலும் கிடைக்காத மகிழ்ச்சி

ஒரு வாழ்த்து அட்டையில் கண்டிப்பாக கிடைக்கும்

என் மருமகனுக்கு என்ற

நம்பிக்கை எனக்கு உண்டு ஏனென்றால்

லியை உணர்ந்தவனுக்கு தான் அன்பின் இனிமை புரியும்

என்றும் அன்புடன் ( பொங்கல் வாழ்த்துகளுடன் )





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக