வியாழன், 15 ஜூலை, 2010

ஆசான்

வாழ்கையில் பல நபர்கள் வந்தார்கள்
ஆசிரியர்கள் என்ற பெயரில்
எனக்கு நல்லுரைகளை போதிக்க .....
ஆனால் ஏற்று கொள்ள முடியாது தவித்தது என் மனம்
காரணம் அவர்கள் கடைபிடிக்க முடியா ஒன்றை
என் மேல் திணித்ததால்....
அதனாலோ என்னவோ
அவர்களை வெறுத்த என் மனம்
உன்னை மட்டும் ஏற்று கொண்டது
என் ஆசானாய்.....
நண்பன் என்ற போர்வையில்
நீ வந்ததனால் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக