வியாழன், 13 மே, 2010

தமிழே முதன்மை

இத்திரு நாட்டில்
எல்லா பிரிவினரும்
தத்தம் இனத்தையே முதன்மையாய்
கொள்ளும்போது
தமிழன்
மட்டும் ஏன் தமிழனாய்
இருக்க முற்படுவதில்லை ......
தமிழன்னை தான்
நம்மை பெற்றவள்
வளர்ப்பவள்
என்றும் காப்பவள் ......
என்பது என் மக்களுக்கு
எப்போது புரிய போகிறது ..
பாரத தாய்க்கு
28 மகன்கள் இருக்கிறார்கள் .....
ஆதலாலோ என்னவோ
அவள் நம்மை எப்போதும்
காலடியிலேயே வைத்திருக்கிறாள்......
ஆனால் நம் தமிழன்னைக்கு
நீ ஒரே மகனல்லவா
அவள்
உன்னை நெஞ்சினில் அல்லவா வைத்திருக்கிறாள் .....
அது எப்போது உனக்கு
புரிய போகிறது ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக