செவ்வாய், 13 ஏப்ரல், 2010

குற்ற உணர்வு

உன்னை தட்டி கேட்க
எங்களுக்கு
துணிவு இல்லை
மாதம்மும்முறை
ஏன் வரவில்லை என்று.......
காரணம்
வருடம் ஒரு முறை கூட நீ
வர முடியாத அளவுக்கு
உன் ஆதிமூலத்தை
வெட்டி சாய்த்து கொண்டிருப்பதே
எங்கள் சகாக்கள்
என்று தெரிந்ததால் தான் ........
எப்போது உணர போகிறார்கள்
இவர்கள்
அழிப்பது உன்னை அல்ல .....
தங்கள் எதிர்கால
சந்ததியினரின்
உயிர் என்பதை .......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக