திங்கள், 12 ஏப்ரல், 2010

வருண தாண்டவம்

புரிகிறது
தந்தை ஸ்தானத்தில் வைக்க வேண்டிய
உன்னை மதிக்காமல் இழிவு படுத்தியதற்காக தான்
இந்த வேதனையை நாங்கள் அனுபவிக்கின்றோம் என்று ....
இருந்தாலும்
தந்தையே தன் சேயை கொடுந்தீயில்
வாட்டிகொல்வது போல ஆகாதா
உனது இந்த செய்கை ......
மாதம் மும்மாரி

நாங்கள் கேட்கவில்லை .....
ஒரு மாரியாவது .....
பொழிய கூடாதா..
என்பதே

எங்கள் வினா .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக