செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நட்பின் வரையறை

புரியவில்லை
உனக்கும் எனக்கும் என்ன பந்தம் என்று .....
எண்ணி பார்க்கின்றேன்
எழுத்தறிவித்தவன்
இறைவன் என்றால்
நீ தான் எனக்கு
இறைவன் ....
பசி போககுபவள்
தாய்என்றால்
நீ தான் எனக்கு
தாய் ......
நல்வழி படுத்துபவர்
தந்தை என்றால்
நீ தான் எனக்கு
தந்தை ......
அன்பு செலுத்துபவர்
சகோதரன் என்றால்
நீ தான் எனக்கு
சகோதரன் .......
எண்ணி பார்க்கிறேன்
இவை எல்லாமே இரத்த வழி உறவுகள் ஆயிற்றே .......
ஆனால் நாம் பிறந்ததோ வெவ்வேறு
கருவறைகள் ஆயிற்றே என்று .......
பின்பு தான் கண்டு கொண்டேன்
நமக்கு உள்ள பந்தம்
ஒரு ஜென்மத்தோடு தோன்றி மறைவது அல்ல என்று ..
காலம் காலமாய் ஜென்ம ஜென்மமாய்
தொடர்ந்த
தொடர போகும் உறவு என்று ......
ஆனாலும் தவித்தேன்
இந்த உறவுக்கு பெயர் என்னவென்று தெரியாமல் ......
பின்பு தான் அறிந்தேன்
இதற்கு ஒரே பெயர் தான் உண்டு என்று .......
அது தான் நட்பு என்று .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக